நாஞ்சில் சம்பத் காரை வழிமறித்து பாஜவினர் கொலைவெறி தாக்குதல்: விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: தெலங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் முருகன் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை நாஞ்சில் சம்பத் ஒருமையில் பேசியதாக கூறி பாஜகவினர் பல்வேறு இடங்களில் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு நாஞ்சில் சம்பத் நேற்று வந்தார். தகவல் அறிந்த பாஜக மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் தனியார் பள்ளி முன் பொன்னேரி- சித்தலூர் புறவழி சாலையில் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்போது நாஞ்சில் சம்பத் கார் வந்து கொண்டிருந்தது. அவரை பார்த்ததும் பாஜகவினர், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு கார் கண்ணாடியை உடைத்து கொலைவெறி தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுனர் காரை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போதும் காரை விடாமல் பின்னால் ஓடிய பாஜகவினர் காரை வழிமறிக்க முயற்சித்தனர். கார் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் திடீரென புறவழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: