விருத்தாசலம்: தெலங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் முருகன் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை நாஞ்சில் சம்பத் ஒருமையில் பேசியதாக கூறி பாஜகவினர் பல்வேறு இடங்களில் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு நாஞ்சில் சம்பத் நேற்று வந்தார். தகவல் அறிந்த பாஜக மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் தனியார் பள்ளி முன் பொன்னேரி- சித்தலூர் புறவழி சாலையில் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.