சென்னை : விலை மலிவான இன்டோமெதசின் என்ற மருந்து கொரோனாவை விரைந்து குணப்படுத்துவதாக சென்னை ஐஐடி மருத்துவ குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 1960ம் ஆண்டில் இருந்து பல்வேறு வகையான அழற்சி தொடர்பான சிகிச்சைகளுக்கு இன்டோமெதசின் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவது குறித்து சென்னை ஐஐடி மருத்துவக் குழு ஆய்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. இந்த மருந்தை எடுத்துக் கொண்ட கொரோனா தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகவில்லை என்றும் 4 நாட்களில் அனைத்து அறிகுறிகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.