திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வழுவதூர் ஊராட்சி காட்டூர் கிராமத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் துவக்க விழா நேற்று நடந்தது. வழுவதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு ஆகியோர் கலந்து கொண்டு, புதிய நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தனர்.