சென்னை: சென்னை, கொளத்தூரில் எவர்வின் பள்ளிக் குழுமத்தின் 30ஆம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 30ம் ஆண்டு நினைவு கல்வெட்டினை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; மே 7ம் தேதி வந்தால் ஆட்சியில் அமர்ந்து ஒரு ஆண்டு ஆகப் போகிறது. இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் என கூறும் நிலை வர வேண்டும். நேரம், உறக்கம் பார்க்காமல் நானும், அமைச்சர்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான் பணி செய்கிறோம். எல்லா மாநிலங்களிலும் பேசும் அளவுக்கு தமிழ்நாடு வளர்ந்தது கொண்டிருக்கிறது.