பெங்களூரு: கர்நாடகாவில் இன்று பியூசி 2ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது. மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டதால் உடுப்பியை சேர்ந்த சில மாணவிகள் தேர்வை புறக்கணித்து சென்றனர். கர்நாடகாவில் இன்று தேர்வு எழுத உடுப்பியில் உள்ள வித்யோதயா பியூ கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களிடம் மாணவிகள் சுமார் 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பலன் எதுவும் கிடைக்காததால் மாணவிகள் தேர்வை புறக்கணித்து வீடு திரும்பினர். ஹிஜாப் வழக்கைத் தொடர்ந்த 6 மாணவிகள் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு அறைக்குள் சென்றனர். கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்தை முன்னின்று நடத்திய அலியா அசாதி என்ற மாணவி, கடந்த வாரம் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தார்.