ஈரோடு : ஈரோடு தினசரி மார்க்கெட்டிற்கு பண்ருட்டி மற்றும் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இருந்து பலாப்பழங்கள் வரத்து இருந்து வருகின்றது. இதில் பண்ருட்டி பலாப்பழங்கள் நல்ல ருசியாக உள்ளதால் அவற்றை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை இனி மெல்ல குறையும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.