பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி வழித்தடத்தில் போலி இரிடிய கலசம் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பழநி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் வண்டி வாய்க்கால் பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடுமலையில் இருந்து பழநி நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் போலி இரிடிய கலசம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.