விசாரணையில் இந்தக் கும்பலைப் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்விவரம்: பானுமதி தலைமையிலான இந்த கும்பல் மாதத்திற்கு 2 தொழிலதிபர்களை மட்டுமே குறிவைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி நெல்லைக்கு வரவழைத்து நகை மற்றும் பணத்தை பறித்து வந்துள்ளனர். பின்னர் அதனை 5 பேரும் சமமாக பங்கிட்டு கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அந்த பணத்தை வைத்துக்கொண்டு சுடலை, பார்த்தசாரதி, ரஞ்சித் ஆகிய 3 பேரும் கோவா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானத்தில் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கைதான ரஞ்சித் போலீசாரிடம் கூறியதாவது: கோவாதான் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதற்கு ஏற்ற இடம். அதனால் அங்கு சென்று சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரைப்பட நடிகைகளை வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருப்போம். எங்களுடன் உல்லாசமாக இருக்க வரும் நடிகைகளுக்கு முன்பதிவு செய்வதற்கு பாதி தொகையை முன்கூட்டியே ஆன்லைன் பேமென்டாக அனுப்பி விடுவோம். அதன்பின்னர் நாங்கள் நெல்லையில் இருந்து கோவாவுக்கு சென்று விடுவோம். இதற்காக ஏஜெண்டுகள் எங்களிடம் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
சென்னையை சேர்ந்த தொழில்அதிபரை இதேபோல் வரவழைத்து அவரிடமும் பணம் பறிக்க இந்த கும்பல் திட்டம்போட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் போலீசார் இந்த கும்பலை பிடித்ததால் சென்னை தொழிலதிபர் தப்பிவிட்டார்.
வட்டிக்கு விட்டனர்
இந்த கும்பலின் தலைவன் மற்றும் தலைவியாக செயல்பட்ட பானுமதியும், வெள்ளத்துரையும் தொழிலதிபர்களிடம் பறித்த பணத்தை முழுவதுமாக வார வட்டிக்கு கொடுத்து அதன் மூலம் சம்பாதித்து வந்துள்ளனர். போலீசார் என்ஜிஓ காலனியில் உள்ள பானுமதி வீட்டில் சோதனை செய்தபோது ஏராளமான தொழிலதிபர்களின் பெயரிலான பணம் நிரப்பப்படாத 50-க்கும் மேற்பட்ட காசோலைகள் சிக்கியுள்ளது. மேலும் அவரது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட புரோ நோட்டுகளும் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு; நடிகைகளுடன் கோவாவில் உல்லாசம்: கைதான கும்பல் குறித்து பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.