இளைஞர்கள் மொபைலில் நேரம் வீணடிப்பதை தடுக்க விளையாட்டரங்கம் போன்ற கட்டமைப்புகள் அவசியம்: காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் வலியுறுத்தல்

சென்னை: ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பேசியதாவது: மொபைல் கேம் உள்ளிட்ட இணைய விஷயங்கள் குழந்தைகள், இளைஞர்களின் நேரத்தை வீணடிக்கிறது. இதை மாற்றுவதற்கு விளையாட்டரங்கம் போன்ற கட்டமைப்புகள் அவசியம். ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட விளையாட்டு அரங்கம், சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் ஒரு  உள்விளையாட்டு அரங்கம் தேவைப்படுகிறது.

அமைச்சர் மெய்யநாதன்: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஸ்ரீமூலக்கரை ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 18 ஏக்கர் இடம் கண்டறியப்பட்டுள்ளது. இது தூத்துக்குடி விமான நிலையத்திற்கு 10 கிலோ மீட்டர் அருகில் உள்ளது. முதல்வர் அறிவித்திருக்கும் மினி இன்டோர் ஸ்டேடியம் திட்டத்தில், நிதிநிலைக்கேற்ப முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கு நிறுவ பரிசீலிக்கப்படும். சாத்தான்குளம் அரசு மகளிர் அறிவியல் கலை கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் கேட்டு இருக்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதிநிலைக்கேற்ப பரிசீலிக்கப்படும் என்றார்.

Related Stories: