ரயிலில் பாய்ந்து தற்கொலை: என் சாவுக்கு சென்னை பா.ஜ. வக்கீலே காரணம்:வைரலாகும் இன்ஜினியரின் வீடியோ

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஏ.பி.நாடானூரைச் சேர்ந்த மூக்கன் மகன் சுரேஷ் என்ற சுப்பிரமணியன். சென்னையில் சாப்ட்வேர் வேலை பார்த்து வந்த இவர் தற்போது பாவூர்சத்திரம் அருகே செல்வவிநாயகபுரத்தில் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிவந்தது. இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுரேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக இரண்டு வீடியோக்களை சமூக வலைதளங்கில் வெளியிட்டுள்ளார். அதில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு ஏ.பி.நாடானூரைச் சேர்ந்தவரும் தற்போது சென்னையில் வசித்து வரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வக்கீல் மற்றும் இன்னொருவரும் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

பாஜ வக்கீலும் தற்கொலை செய்த சுரேசும் நண்பர்கள். இருவருக்கும் பணம் விவகாரம் தொடர்பாக பிரச்னை இருந்ததாகவும், இதனால் சுரேஷ் மனவருத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோக சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரயில்வே போலீசார் சுரேசின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: