நீலகிரி: உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், மலை ரயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் ஊட்டி ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நீலகிரியில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியதால் தின்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையானோர் மலை ரயிலில் பயணம் செய்தபடியே இயற்கை அழகை நேரில் கண்டுகளிக்க விரும்புகின்றனர். இதனால் உதகை மேட்டுபாளையம் இடையிலான மலை ரயிலில் பயணிக்க மே மாதம் இறுதி வரை முன்பதிவு முடிந்துள்ளது.