பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே14 வயது சிறுமியை காதலித்து வரும் இளைஞரை தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோர் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தை சேர்ந்த 24 வயது இளைஞரான தனபால்,14 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்தார். 9ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அடிக்கடி தொந்தரவும் செய்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், தனபாலின் வீட்டுக்கு சென்று கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது, வாஷிங்மெஷினில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து, சிறுமியின் பெற்றோர் மீது தனபால் வீச முயன்றுள்ளார்.