முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சாம்பான் குளத்தை கண்டுபிடித்து மீட்டு தரவேண்டும் என்று கலெக்டர், அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மாவட்ட கலெக்டர், எஸ்பி, டிஆர்ஓ, ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் உள்ள புல எண் 91/5ல் 84 ஏர்ஸ் (2 ஏக்கர்) கொண்ட சாம்பான்குளம் இப்பகுதி பொதுமக்களுக்கும், விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கும் மிகவும் பயன்பட்டு வந்த நிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தனியாரால் தூர்க்கப்பட்டு குளம் இருந்ததற்கான அடையாளம் தெரியாதளவில் உள்ளது.