அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க 376 கி.மீ. தூரத்திற்கு திட்டம் தீட்டப்பட்டு 300 கி.மீ. தூரத்திற்கு வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. தற்போது, 150 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுகிறது. தியாகராயநகர் பகுதியில் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டபோது 3 ஆண்டுகள் நீர் தேங்கவில்லை. மழை வராது என நினைத்து, மாம்பலம் கால்வாயை அடைத்து வேலை பார்த்தபோதுதான் நீர் தேங்கியது.