மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க வேண்டும்

சென்னை: மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்டத்தை வகுக்க ஏப்ரல் 25 வரை கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்ணாடியை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: