இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு நம்பிகையில்லா தீர் மானத்தில் தோல்வி அடைந்ததால் அரசு கவிழ்ந்ததை அடுத்து, புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், புதிய சபாநாயகராக ராஜா பர்வேஸ் அஸ்ரப் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி முதல் 2013 மார்ச் 16ம் தேதி வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார்.இந்நிலையில், ஷெபாஸ் அரசுக்கு எதிராக இம்ரான் கான் போராட்டங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், டிவிட்டரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘வெளிநாட்டு சதியால் பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஊழல் அரசு திணிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரசை அகற்றுவதற்காக நடத்தப்படும் போராட்டத்துக்காக வெளிநாட்டில் வாழும் பாகிஸ்தானியர்கள் தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.