சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 11ம் தேதி திருப்பதி செல்லும் ரயிலில் மாநில கல்லூரி மாணவர்களும், அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பயணித்தனர். பெரம்பூர் ரயில் நிலையம் வந்தவுடன், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் இருந்தபடியே கற்களை தூக்கி திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் பயணித்த மாநில கல்லூரி மாணவர்கள் மீது எறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, திருப்பதி செல்லும் விரைவு ரயிலை நிறுத்திய மாநில கல்லூரி மாணவர்கள், தண்டவாளத்தில் இறங்கி அங்கிருந்த ஜல்லி கற்களை எடுத்து, மின்சார ரயிலில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது சரமாரியாக வீசினர்.