கொடைக்கானலில் சுற்றுலா இடங்களை பார்க்க மீண்டும் அரசு பஸ் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு போக்குவரத்து கழக மேலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  சார்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் உள்ள 12 சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க, கொடைக்கானல் பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் துவங்கும் இச்சேவையை சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கோடை சீசன் காலங்களில் மட்டும் இந்த அரசு பஸ் சேவை இயங்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இச்சேவை மீண்டும் துவங்கி உள்ளது.

Related Stories: