சென்னை ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? ஊரடங்கு மற்றும் தளர்வுகள் பற்றி உயர் அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை Jun 10, 2021 முதல்வர் சென்னை முதல் அமைச்சர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு ஜூன் 14-ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில் நீட்டிப்பது, தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறுது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்து 321 ஆக குறைந்திருந்தது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்பு சற்று அதிகரித்து வருகிறது. … The post ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? ஊரடங்கு மற்றும் தளர்வுகள் பற்றி உயர் அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை appeared first on Dinakaran.
அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே
மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு
கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு.. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அலாரம் பொருத்தும் பணி தீவிரம்
அண்ணாநகர் கோட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி கிரைய பத்திரங்களை பெறலாம்: கலெக்டர் வேண்டுகோள்
மழைக்காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சிறப்பு கூட்டத்தில் அறிவுறுத்தல்
மழைக்காலத்தில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணி செய்ய வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்: திருவிக நகர் மண்டல குழு கூட்டத்தில் அறிவிப்பு
தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு