ராமநவமிக்கு ஆளுநர் வாழ்த்து

சென்னை: ராமநவமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ராமநவமியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு எனது வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீராம் என்ற சொல் நமது பண்பாடு மற்றும் ஆன்மீகத்தின் குறியீடாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் மனித வாழ்வில் மிகச் சரியான நித்தியமான மதிப்புகளையும் கொண்டதாக இருக்கிறது. ராமநவமி ஒரு மங்கலகரமான நிகழ்வாக இருக்கிறது. மேலும், நமது வாழ்வில் ஸ்ரீராமருக்கு நம்மை நாம் மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவை தற்சார்பு மற்றும் புகழ் வாய்ந்ததாக கட்டமைக்க அவசியமாகவும் இருக்கிறது. இவ்வாறு  ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: