சூளகிரி: சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை தெரு, வாணியர் தெரு, கீழ்தெரு, மூஸ்லீம் தெரு, அண்ணா நகர், கமலா காலனி, காமராஜர் நகர், ஒசூர் கிருஷ்ணகிரி சாலை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இவை வனப்பகுதியையொட்டி உள்ளதால், குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை மற்றும் மாலையில் வீட்டின் திண்ணை மற்றும் ஜன்னல்களை ஆக்கிரமிக்கும் குரங்குகள், சமையல் அறைக்கு சென்று அங்கு உள்ள தின்பண்டங்களை சாப்பிட்டு விடுகிறது.