கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை; மேலும் 21 பேர் தனுஷ்கோடி வருகை.! போலீசார் விசாரணை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையானது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை தமிழர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு அகதிகளாக தமிழகத்திற்கு வருகை புரிகின்றனர்.

இந்நிலையில், இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாகவும், தனுஷ்கோடிக்கு அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையிலிருந்து 20 பேர் ஏற்கனவே தமிழகம் வந்த நிலையில், தற்போது மேலும் 21 பேர் வந்துள்ளதால் இதுவரை தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: