கோவில்பட்டி: கோவில்பட்டியில் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சின்னகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (57). இவர், கோவில்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் 8 பேருக்கு தாமஸ் சாமுவேல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.