மும்பை: மும்பையில் குழந்தைகளின் தண்ணீர் பாட்டில் மூலம் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்திய பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த மன்குர்ட் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போதைப் பொருட்களை வைத்திருந்த பெண் உட்பட இருவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 935 கிராம் ஹெராயினை மீட்டனர். இதன் சர்வதேச மதிப்பு 5 கோடியே 80 லட்சம் என்று கூறப்படுகிறது.