சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற அலுவலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை அலுவல் மொழியாக்கப்படும், ஆட்சி மொழியாக ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.