ஒட்டன்சத்திரம்: பிரதமர் மோடியால்தான் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்பனையாகிறது என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அதிகளவு பங்கேற்கவில்லை. கட்சி நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் அவர்களும் சுட்டெரிக்கும் வெயிலால் கலைந்து செல்ல துவங்கினர்.