பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் கறவை மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த இரண்டுபேரை கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் கவுசல்யா (48). இவர் பால் மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த மாதம் 29ம்தேதி, கொடுங்கையூர் தென்றல் நகர் பகுதியில் 3 கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு சென்றார். அவர் மாலையில் மாடுகளை பிடிக்கவந்தபோது மாடுகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதி மக்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அதே பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் இரண்டு மாடுகளையும் காணவில்லை என்று புகார் கொடுக்கப்பட்டது. இதன்படி, கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.