வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோயில் திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வீதிஉலா நடைபெற்றது.இந்நிலையில் நேற்று கோயிலின் முக்கிய திருவிழாவான வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத திருவிழா நடந்தது. முன்னதாக தகட்டூர் பைரவநாத சுவாமி ஆலயத்திலிருந்து கொப்பரை எடுத்து வரப்பட்டது. 5 கி.மீ. தூரம் வரை எடுத்து வரப்பட்டு கோயிலை வலம் வந்து பின்பு வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பக்தர்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழங்களை பிடித்து எடுத்து சென்றனர்.