சென்னை: நான் எனது குழந்தைகளை சந்திப்பதை தடுக்க சதி செய்வதாக முன்னாள் மனைவி மோனிகா மீது டி.இமான் புகார் அளித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமான் தன் குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. எனவே மோனிகா மீது நடவடிக்கை எடுக்குமாறு இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தன்னுடைய இரண்டு குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதாகவும் ஆனால் அதை மோனிகா மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றிருப்பதாகவும் டி.இமான் தனது மனுவில் கூறியிருந்தார்.