துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி குமரன் நகரை சேர்ந்த பாட்ஷா (25), நேற்று முன்தினம் இரவு அங்குள்ள நடைமேம்பாலத்தில் நடந்து சென்றார். அப்போது, கத்தியுடன் வந்த 2 பேர், பாட்ஷாவை வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் சுகுமாரன், ஏட்டு பிரகாஷ் ஆகியோர் இதை பார்த்து, அங்கு ஓடி வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த 2 பேரும், பாட்ஷாவின் காலில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். அவர்களை போலீசார் விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது எதிரே வந்த செம்மஞ்சேரி போலீசார், அவர்களில் ஒருவரை சுற்றிவளைத்து பிடித்தனர். மற்றொருவர் தப்பினார்.