சாத்தனூர்: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2021-2022ம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் ஏரிகளுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 140 க.அடி / வினாடி மற்றும் 160 க.அடி / வினாடி வீதம் மொத்தம் 300 கனஅடி/வினாடி தண்ணீரை 04.04.2022 முதல் 19.05.2022 வரை 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக 1166.40 மி.க.அடி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.