குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்

குன்னூர் :  குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில்  ஜெகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகிறது.நீலகிரி  மாவட்டம் குன்னூரில் ஜெகரண்டா மலர்கள் பூத்துள்ளது. கடந்த 18ம்  நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரிக்கு வந்த ஆங்கிலேயர்கள்  வெளிநாட்டு மரங்களான ஜெகரண்டா பிளேம் ஆப் பாரஸ்ட், யூகலிப்டஸ் உள்ளிட்ட பல்வேறு வகை மரங்களை நடவு செய்தனர்.

இதில், ஜெகரண்டா மரங்களில், நீல நிற மலர்கள் கோடையில் மலர்வது வழக்கம்.  தற்போது, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பூக்கள்  பூத்து சாலையின் இரு புறமும் அலங்கரிக்கின்றன. மலைப்பகுதியில் இந்த மரங்களில், மலர்ந்துள்ள ஜெகரண்டா  மலர்களை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். குன்னூர்  மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள  மரத்தின் அருகே, பலர் நின்று, புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில்  மூனுரோடு, கேசலாட போன்ற பகுதியில் தேயிலை தோட்டங்களில் நடுவே தற்போது ஜகரண்டா  மலர்கள் பூத்து உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Related Stories: