விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரின் காவல் விசாரணை நிறைவடைந்ததால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். விருதுநகர் மேல தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் 22 வயதான இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி நாடகமாடியுள்ளார். இதை நம்பி அந்த பெண்ணும் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். பின்னர் ஹரிஹரன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் நெருக்கமாக இருந்த வீடியோ பதிவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் தங்கள் ஆசைகளுக்கு இணங்க வேண்டும் எனவும், இல்லையெனில் வீடியோ பதிவினை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் எனவும் அப்பெண்ணை மிரட்டி அந்த கும்பலை சேர்ந்த அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.