சென்னை: புதிய வினாத்தாள் மூலம் 12ம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் இன்னும் ஓரிரு மாதங்களில் இறுதித்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமையான நாளை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத்தேர்வு நடைபெற இருந்தது.