ஆலந்தூர்: பம்மல் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சுடர் ஒளி(21). கானா பாடகர். இவர் தனது நண்பர்களுடன் நேற்று நந்தம்பாக்கத்தில் துக்க நிகழ்ச்சியில் கானா பாடல்களை பாடி விட்டு பம்மல் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தார். பரங்கிமலை சிமென்ட் ரோடு சிக்னல் அருகே சென்றபோது அவ்வழியே சென்ற கார் மீது பைக் திடீரென மோதியது. பின்னர் அதே வேகத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஆம்னி பேருந்தின் மீது பைக் மோதியது. இதில் பைக்கில் சென்றவர்கள் கீழே விழுந்தனர். இதில் சுடர்மணி பலத்த காயமடைந்தார்.