புதுடெல்லி:டெல்லி வந்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை நேற்று சந்தித்து ஏழு கோரிக்கைகள் கொண்ட மனுவை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதேப்போன்று எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம் மற்றும் இந்தியமுறை மருத்துவ படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து தொழிற்கல்வி இடங்களையும் நிரப்ப தமிழக அரசுக்கு அனுமதிக்க வேண்டும். கட்டுமானப் பணியை துரிதப்படுத்தி மதுரையில் எய்மஸ் மருத்துவமனையை உடனடியாக நிறுவிட வேண்டும். கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க அனுமதித்து அதுகுறித்த நடவடிக்கைய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.