சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்துடன் சண்டிகரை இணைப்பதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா தனியாக பிரிக்கப்பட்ட போது, இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டிகர் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து யூனியன் பிரதேசமான சண்டிகரை பஞ்சாப் 60%மும் ஹரியானா 40மும் நிர்வகித்து வந்தன. ஆனால் தற்போது சண்டிகரை நிர்வகிக்க வேறு மாநில அதிகாரிகளை அதிகளவில் நியமிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
