கொடைக்கானல்: சூசூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியாகும் சக்தி வாய்ந்த காந்த புயல் பூமியின் வளி மண்டலத்தை தாக்கக்கூடும் என்று ஏற்கனவே நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து சூரிய காந்தப்புயலின் தாக்கம் குறித்து, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் 5 தொலைநோக்கிகள் மூலம் கண்காணித்து வந்தது. இதில் காந்தப்புயல் நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 முறை மிதமான முறையில் பூமியை தாக்கியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த காந்தப்புயலின் தாக்கம் இனிவரும் நாட்களில் வலுவாக தொடரும், இதனால் தொலைத்தொடர்பு சேவைகளில் பாதிப்புகள் ஏற்படும் என்று கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.