மதுரை: நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜனுடன் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு உள்பட எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.