திருச்சி: தேச துரோக வழக்கில் திருச்சி கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 23 பேர் நேற்று ஆஜராகினர். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே பஞ்சப்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன எழுச்சி அரசியல் மாநாடு 2015ல் நடந்தது. மாநாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் இயக்கம் குறித்தும், அதன் தலைவரான மறைந்த பிரபாகரன் குறித்தும் பேசினர். இதனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 40 பேர் மீது எடமலைப்பட்டிபுதூர் போலீசார் தேச துரோக பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி ஜேஎம்2 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.