லால்குடி: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் பிரசித்தி பெற்ற குழுந்தாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன், பேரூராட்சி தலைவர் ஆலீஸ்செல்வராணி தொடங்கி வைத்தனர். இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 638 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணி வரை நடைபெற்றது. காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் காயமடைந்தனர்.