திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். கீழச்சிவல்பட்டி ஸ்ரீமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 20ம் தேதி காலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து மாரியம்மன் கோயிலுக்கு மாரியம்மன் எழுந்தருளல் நடந்தது. மாலையில் காப்பு கட்டப்பட்டு விழா துவங்கியது. 2ம்நாள் முதல் 8ம் நாள் வரை அம்மன் வெள்ளி சிம்மம், ரிஷபம் வாகனத்தில் எழுந்தருளினார்.