நன்னிலம் : நன்னிலம் அருகே மகாராஜபுரத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 300 நெல் மூட்டைகளை கிழித்து சேதப்படுத்தியதாக புகாரின்பேரில் பேரளம் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள மகாராஜபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் சுமார் 4500 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் வாங்கி அடுக்கி வைத்து அதன்மேல் தார்பாய்கள் போர்த்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.