புதுடெல்லி: ஹிஜாப் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ‘ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. அதனால் கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப்புக்கான தடை தொடரும்’ என கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.