உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் ராகுலுக்காக சோனியா காந்தி பிரச்சாரம்..!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுலுக்காக சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். ரேபரேலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்திக்காக சோனியா காந்தி வாக்கு சேகரித்தார். சோனியா காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்றனர். தற்போது மக்களவை தேர்தலில் முதன்முறையாக ரேபரேலியில் சோனியா காந்தி பிரச்சாரம் செய்கிறார்.

 

The post உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் ராகுலுக்காக சோனியா காந்தி பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: