மாணவிக்கு காதல் டார்ச்சர்: மேஸ்திரி போக்சோவில் கைது

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அருகே உள்ள  ஒரு அரசு பள்ளியில் 9ம்வகுப்பு படித்து வருகிறார். கீழ்விலாசூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமால்(23). கட்டிட மேஸ்திரி. கடந்த 24ம்தேதி மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு  வடுகன்தாங்கல்-விரிஞ்சிபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த திருமால், மாணவியை வழிமறித்து, தன்னை காதலிக்கும்படி கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.

மேலும் என்னுடன் பைக்கில் வா,  இல்லையெனில் கொன்றுவிடுவேன் என மிரட்டினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின்  பெற்றோர் நேற்று கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருமாலை  கைது செய்தார்.

Related Stories: