கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 9ம்வகுப்பு படித்து வருகிறார். கீழ்விலாசூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமால்(23). கட்டிட மேஸ்திரி. கடந்த 24ம்தேதி மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வடுகன்தாங்கல்-விரிஞ்சிபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த திருமால், மாணவியை வழிமறித்து, தன்னை காதலிக்கும்படி கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.