அம்பிகாபூர்: சட்டீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்தாலா கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரது 7 வயது மகள் சுரேகா, கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள லக்கான்பூர் சுகாதார மையத்தில் தனது மகளை ஈஸ்வர் நேற்று முன்தினம் காலை அனுமதித்தார். சுரேகாவின் ஆக்சிஜன் அளவு 60க்கும் கீழ் இருந்ததாக தெரிகிறது. மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்துள்ளனர். எனினும், சுரேகா சிகிச்சை பலனின்றி காலை 7.30 மணிக்கு உயிரிழந்தார். அமரர் ஊர்தி வரும் வரை தனது மகளின் சடலத்தை மருத்துவமனையில் வைத்திருக்க ஈஸ்வர் தாஸ் விரும்பவில்லை. இதனால், மகளின் சடலத்தை தனது தோளில் தூக்கி சுமந்தபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.