விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்


புதுடெல்லி: தமிழ்நாடு மணல் குவாரி விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு ஐகோர்ட் தடை விதித்தது. இதற்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘மணல் குவாரி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஈடியில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ” இந்த விவகாரத்தில் எங்களது தரப்பில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து விட்டோம்.

மேலும் விசாரணைக்காக ஆஜராகிருந்த மாவட்ட ஆட்சியர்களை காலை எட்டு மணி முதல் மாலை ஆறு வரையில் விசாரணை எதுவும் நடத்தாமல் நீண்ட நேரம் தேவையில்லாமல் காத்திருக்க வைத்துள்ளனர் என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் நிலுவையில் இருக்கும் ஆவணங்களை அமலாக்கத்துறை பிரமாணப் பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை தேவையில்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?. அதுபோன்று செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன் , விசாரணையை கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்தனர்.

The post விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: