வருசநாடு: தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியம் தண்டியகுளம், அண்ணாநகர், கோடாலியூத்து, இந்திராநகர், பொம்முராஜபுரம், வெள்ளிமலை, அரசரடி, காந்திகிராமம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 50 ஆண்டுகாலமாக அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்படாததால், கரடுமுரடான மண் சாலைகளில் மலைக்கிராம மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தார்ச்சாலை வசதியில்லாததால், வாகன போக்குவரத்து வசதியில்லை. இதனால் ரேஷன் அரிசி, சர்க்கரை, கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தலைச்சுமையாக
மக்கள் சுமந்து செல்கின்றனர்.