ஆடிட்டர் அலுவலகத்தை உடைத்து ₹13 லட்சம் திருடிய மர்ம ஆசாமியின் உருவப்படத்தை வெளியிட்ட போலீஸ்

புதுச்சேரி :  புதுச்சேரியில் 4 மாதங்களுக்கு முன்பு ஆடிட்டர் அலுவலகத்தில்  ரூ.13 லட்சம் திருடப்பட்ட வழக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை  வரைப்படமாக வரைந்த போலீசார் அதனை வெளியிட்டு திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை  தீவிரமாக தேடி வருகின்றனர்.  புதுச்சேரி அண்ணா சாலையில் வசித்து  வருபவர் ஆடிட்டர் மிர்ஷா (48). கடந்த அக்டோபர் 16ம் தேதி இவரது வீட்டின்  கீழ் தளத்தில் உள்ள அவரின் அலுவலகத்தை யாரோ மர்ம நபர் உடைத்து அங்கு  வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சத்தை திருடி சென்று விட்டார்.  இதுகுறித்து  அவர் பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதுதொடர்பாக அங்கு  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் மர்மநபர் ஒருவர்  மிஷ்ராவின் அலுவலகத்தில் இருந்து வெளியே வருவது பதிவாகி இருந்ததை அடுத்து  கேமராவில் பதிவான உருவத்தை போலீசார் வரை படமாக வரைந்து அதனை தற்போது  வெளியிட்டு பணம் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும் வரையப்பட்ட படத்தில் உள்ளவர் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல்  தெரிந்தால் கிழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு உடனே தகவல்  தெரிவிக்கும்படி போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளனர்.  இந்த படத்தை  புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை  தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால் விரைவில் மர்மநபர் சிக்குவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: